

இந்து மதத்தின் இரு பெரும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்தில் கூறப்பட்டிருக்கும் தர்மங்களும், நியாயங்களும் வேறு எந்த நுால்களிலும் சொல்லப்பட்டதில்லை. மனித வாழ்வின் அடிப்படையே தர்மம்தான். இந்த இரு இதிகாசங்களும் இதைத்தான் உணர்த்துகின்றன.
இதிகாசங்களையும் புராணங்களையும், நாம் படித்திருந்தாலும், சில விஷயங்கள் நமக்குத் தெரியாமல் இருக்கும். அந்த தெரியாத விஷயங்கள் மிகுந்த சுவாரஸ்ய மானதாக இருக்கும். மகாபாரத போருக்குப் பிறகு பாண்டவர்களின் நிலை, ராவணனை அழித்த பிறகு, ராமனின் நிலை உள்ளிட்ட விஷயங்களில் பல சுவாரஸ்யமான கதைகள் இருக்கின்றன.