

ஆனந்த வாழ்வு அளிக்கும் தலமாக ஆவணியாபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில் போற்றப்படுகிறது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், ஒரே கோயிலுக்குள் 5 திவ்யதேச மூர்த்திகளின் திவ்ய தரிசனத்தையும், உக்கிரம் தணிந்து கருணை மழையாகப் பொழியும் நவ நரசிம்ம மூர்த்திகளின் பேரருளையும் ஒருங்கே பெறும் பேற்றை அடைகின்றனர்.
‘அவனி நாராயணபுரம்' என்று அழைக்கப்பட்ட ஊர், காலப்போக்கில் ஆவணியாபுரம் என மருவியதாகக் கூறப்படுகிறது. சம்ஸ் கிருதத்தில் ‘அவனி' என்றால் 'சிங்கம்' என்று பொருள். அதனால் இத்தலம் ‘ஆவணியாபுரம்' என்று பெயர் பெற்றது.