

‘வாயினால் பாடி மனத்தால் சிந்தித்து தூமலர் தூவி இறைவனை அன்றாடம் வழிபட வேண்டும்’ என்று பாவை பாடிய பைங்கிளி ஆண்டாள் பிறந்த திருவாடிப்பூரத் திருநாள் அனைத்து வைணவ கோயில்களிலும் சிறந்த விழாவாக கொண்டாடப்படுகிறது. பெரியாழ்வார் அமைத்த நந்தவனத்தில் துளசி காட்டில் தூயவளாய் தோன்றியவள் ஆண்டாள். அன்னை மகாலஷ்மியே பெரியாழ்வார் தமிழ் கேட்க அவரது திருமகளாய் அவதரித்தார்.
அந்த ஆண்டாள் பிறந்த திருவாடிப்பூரத்தில் திருக்கடல் மல்லை என்னும் மாமல்லபுரத்தில் ஆடிப்பூர உற்சவம் (திங்கள்கிழமை 28.7.2025) நடைபெறுகிறது. மாலை 3 மணியளவில் ஸ்தலசயனப் பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் திருமஞ்சனம் நடைபெற்ற பின்பு மாட வீதி உலா காண திவ்ய தம்பதி எழுந்தருள்கின்றனர்.