ஆனந்தம் தந்தருளும் மங்கள சனீஸ்வரர்

ஆனந்தம் தந்தருளும் மங்கள சனீஸ்வரர்
Updated on
2 min read

கும்பகோணத்தில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள நாச்சியார் கோவில் திருநறையூரில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோயிலில் அலங்காரசுத்தரி கோலத்தில் பர்வதவர்த்தினி அம்பாள் அருள் பாலிக்கிறாள். இங்கு நவக்கிரக பீடத்தில் உள்ள சூரிய பகவான் உஷா, பிரதியுஷாவுடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள சனீஸ்வரர் மங்கள சனீஸ்வரராக போற்றப்படுகிறார்.

சனி பகவான் மணிமுத்தா நதியின் வட ஆரண்யத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சர்வேஸ்வரனை நோக்கி கடும் தவம் புரிந்தார். அதன் பயனாக ஈஸ்வர பட்டமும், கிரக அந்தஸ்தும் பெற்றார். சனீஸ்வர பகவானின் பரிகாரத் தலமாகப் போற்றப்படும் பிரம்ம புரியில் (திருநரையூர்) அவர் தன் மனைவிகள் மந்தாதேவி, ஜேஷ்டா தேவி, மந்தாதேவியின் இரு மகன்கள் குளிகன், மாந்தியுடன் அருள்பாலிக்கிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in