

யோகம், தியானம், தவம் ஆகிய அரிய கலைகள் குறித்து அகத்தியர் முதல் இன்று வரை பல ஞானிகள் விளக்கிக் கூறியுள்ளனர். இன்றைய சூழலில், மெய்ஞானமே உண்மையான அமைதியை தரும் என்பதை நாம் யாவரும் உணர்ந்துள்ளோம். இறைவனே நமக்கு உண்மையான குரு. அவர் காட்டிய மெய்ஞான வழியிலேயே எப்போதும் நடப்போம்.
யோகம், தியானம், தவம் போன்றவற்றில் பயிற்சி பெற வெளிநாடுகளிலிருந்து நம் நாட்டுக்கு பலர் வருகின்றனர். ஏனெனில், நம் நாட்டில்தான் சித்தர்கள் உருவாக்கியுள்ள முறையான மெய்வழிகள் உள்ளன. ஒவ்வொரு மனிதரும் தன்னையறிந்து கொள்வதுடன், இறைவனையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே நம் சித்தர்களின் விருப்பம். அதற்காகவே அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தனர்.