

கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யர் மலை ரத்னகிரீஸ்வரர் கோயிலில் ஈசன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவன் கோயில்களில் இது 64-வது தேவாரத் தலம் ஆகும். ஒரு சமயம் சூரியராஜன் என்ற மன்னனின் நவரத்தின கிரீடம் காணாமல் போனது. மன்னனும் கிரீடத்தைத் தேடி அலைந்தான். அய்யர் மலையில் ஈசனிடம் கிரீடம் இருப்பதாக ஒரு வேதியர், மன்னனிடம் தெரிவித்தார். இதைக் கேட்டதும் மன்னன் படையுடன் அய்யர் மலைக்கு விரைந்தான். ஈசனே கோயிலில் ஓர் அந்தணராக நின்று கொண்டிருந்தார்.
அருகில் இருந்த கொப்பரையில் காவிரியில் இருந்து நீர் கொண்டு வந்து நிரப்பினால் மணிமுடியைக் கொடுப்பதாகக் கூறினார். அரசனும் நீர் கொண்டு வந்து நிரப்பினான். எவ்வளவு முயன்றும் கொப்பரை நிறைந்த பாடில்லை. ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த மன்னன், தனது வாளை எடுத்து அந்தணர் மீது வீசினான்.