

வங்கக் கடல் அருகே சென்னை பெசன்ட் நகரில் ஸ்ரீ வரசித்தி வல்லப விநாயகர் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. மிகவும் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வரும் இக்கோயில் அருளின் பெருக்காக, பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் கற்பக விருட்சமாக, சுகத்தின் ஊற்றாக விளங்குகிறது.
ஸ்ரீ வரசித்தி வல்லப விநாயகர் கோயிலின் மூலஸ்தான ராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பானதாக கருதப்படுகிறது. கோயிலில் பாஞ்சராத்ர முறைப்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மூலவர் விநாயகப் பெருமான் சந்நிதிக்கு உட்புறம் பக்த ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது.