

தவத்தால் கிட்டும் பலன்கள் அனைத்தும் தேரோட்டத்தின்போது தேரையும், உலா வரும் இறைவனையும் தரிசிப்பதால் கிட்டும். ஆனி மாதத்தில் தேரில் எழுந்தருளி அருள்பாலிக்கும் நெல்லையப்பரை வரவேற்று, தரிசித்துப் பேரானந்தம் கொள்வதற்காக திருநெல்வேலி அருகேயுள்ள ரஸ்தா பகுதியைச் சேர்ந்த சிவலோக பண்டாரநாதரும் வருவதுண்டு.
தேர்த் திருவிழாவுக்கு இடுப்பை மறைக்கும் வஸ்திரம், நீண்டதாடி, ஊன்றுகோல் சகிதம் வந்திருந்தார். ஆனால் பண்டாரக் கோலத்தில் இருந்த அவரைப் பார்த்து, அங்கிருந்த சில இளைஞர்கள் கேலி செய்து, தேரை இழுக்க விடாமல் அங்கிருந்து அவரை விரட்டினர்.