

சாஸ்தா கோயில்கள் அனைத்திலும் உருவ வழிபாடு உள்ளது. ஆனால் எட்டு சாஸ்தாக்களில் முதன்மை சாஸ்தாவாக கருதப்படும் சாஸ்தாவுக்கு உருவம் கிடையாது. அரூப வடிவில் பிரம்மராயர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
பரந்துவிரிந்த பூவுலகில் எட்டுதிசைகளையும் திசைக்கு ஒருவராக 8 சாஸ்தாக்கள் காவல் காப்பதாக கூறப்படுகிறது. அரூப சாஸ்தா, பால சாஸ்தா, ருத்ர சாஸ்தா, தர்ம சாஸ்தா, எரிமேலி சாஸ்தா, ஆகாச சாஸ்தா, ஆலப்புழா சாஸ்தா, கால சாஸ்தா ஆகிய இந்த எட்டு சாஸ்தாக்களில் அரூப சாஸ்தா தான் முதன்மை சாஸ்தா என்று கூறப்படுகிறது.