மனதை தாக்கும் இரண்டாவது அம்பு

மனதை தாக்கும் இரண்டாவது அம்பு
Updated on
2 min read

மனிதன் காலையில் எழுந்ததில் இருந்து, இரவு உறங்கச் செல்லும் வரை பல நினைவுகளால் சூழப்படுகிறார். கடந்த கால நினைவுகள் எனும் சுமையை விட்டு, எதிர்காலம் எனும் அச்சத்தையும் விட்டு நிகழ்காலத்தில் அடையாளங்களைத் துறந்த ‘நான்’ யார் என்பதை உணர்வதே பரிபூரண உண்மையான ஆன்மிக அனுபவமாக இருக்கும்.

நினைவுகளின் சுமையில் இருந்து விடு படவே ஒவ்வொருவரும் விரும்புகிறார். மனித மூளை இயற்கையின் ஓர் அற்புதப் படைப்பு. ஐந்து புலன்களால் உணரப்படும் ஒவ்வொரு நிகழ்வும் மனதில் பதிகிறது. நம்முடைய மூளை எண்ணங்களை உற்பத்தி செய்கிறது. இவ்வாறு உருவாகும் எண்ணங்களை நாம் விடாமல் பின்தொடர்வதே சிந்தனையாக மலர்கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in