

திருமாலின் வலது கரத்தை அலங்கரிக்கும் சக்கர ஆயுதம், சுதர்சனாழ்வாராக வணங்கப்படுகிறார். திருமாலுக்கு இணையானவராகக் கருதப்படும் இவர், பக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளுக்குள் உறையும் பயத்தை போக்குபவராக போற்றப்படுகிறார்.
மனிதனின் நிம்மதியை பாதிக்கும் கடன், நோய், பகைவர் தரும் இன்னல்கள் என அனைத்தையும் நீக்கி, மகிழ்ச்சி அளிப்பவராகவும், கல்வி யோகத்தை அளிப்பவராகவும் சக்கரத்தாழ்வார் விளங்குகிறார். திருவாழியாழ்வான், சக்கரராஜன், ரதாங்கம், நேமி, திகிரி என்று பல பெயர்களில் அழைக்கப்படும் சுதர்சனாழ்வார், பெருமாள் கோயில்களில் தனிசந்நிதியில் 16, 32 என்ற எண்ணிக்கையில் கரங்களைக் கொண்டு அருள்பாலிக்கிறார்.