

உத்தராகண்ட் மாநிலம், ருத்ரபிரயாகை மாவட்டத்தில் உள்ள கார்த்திக் சுவாமி கோயில், வேண்டியது அனைத்தையும் நிறைவேற்றும் திருத்தலமாக போற்றப்படுகிறது. சுற்றிலும் பனி மலைகள் சூழ்ந்த சிகரத்தில் இருந்து சூரிய உதய நேரத்திலும், சூரிய அஸ்தமன சமயத்திலும் முருகப் பெருமானை தரிசிப்பது நற்பலன்களைத் தரும் என்று கூறப்படுகிறது.
தேவ பூமியாக உத்தராகண்ட் மாநிலம் போற்றப்படுகிறது. பஞ்ச பிரயாகையில் (நந்தப் பிரயாகை, தேவப் பிரயாகை, ருத்ர பிரயாகை, கர்ணப் பிரயாகை, விஷ்ணுப் பிரயாகை) ஒன்றான ருத்ரப் பிரயாகையில் அலக்நந்தா நதியும் மந்தாகினி நதியும் சங்கமமாகின்றன.