

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் ஈசன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவன் கோயில்களில் இது 51-வது தேவாரத் தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது தர்ம சக்தி பீடம் ஆகும். சப்தஸ்தான தலங்களில் ஒன்று.
சிலாது முனிவரின் மகனாக அவதரித்தவர் நந்திகேசர். பிறக்கும்போது 4 கைகளுடன் பிறந்தார். குழந்தையை ஒரு பெட்டியில் வைத்துவிட்டு, சிலாது முனிவர் அப்பெட்டியை மூடித் திறந்தார். உடனே இரண்டு கைகள் நீங்கி, வழக்கமான குழந்தையாக விளங்கியது. குழந்தையை திருவையாறு தலத்தில் விட்டுவிட்டு சென்றார் முனிவர்.