அன்பின் திருவுருவம் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா

சத்ய சாய்பாபா பிரசாந்தி நிலையம்
சத்ய சாய்பாபா பிரசாந்தி நிலையம்
Updated on
3 min read

உலக மனித விழுமியங்கள் தினமாகவும், பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் ஆராதனை தினமாகவும் ஏப். 24-ம் தேதி உலகம் முழுவதும் நினைவுகூரப்பட்டு, மிகப் பெரிய அளவில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை, உபதேச மொழிகள் அனைத்தும் மக்களை வழி நடத்தும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் இவரது நூற்றாண்டு வைபவமும் சேர்ந்து கொண்டதால், கொண்டாட்டங்கள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன.

எண்ணிலடங்கா அற்புதங்கள், தெய்வீக ஞானம் ஆகியவற்றால் நன்கு அறியப்பட்ட பாபா, ஒற்றுமை, கருணை, ஒருமைப்பாடு, அன்பு, உண்மை, சாந்தி, தர்மம், அகிம்சை உள்ளிட்ட மனித விழுமியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதகுலத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் உபதேச மொழிகளை உலகுக்கு அளித்துள்ளார். இதன் மூலம் உலக அளவில் எண்ணற்ற பக்தர்கள் பயனடைந்துள்ளனர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in