

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பச்சைபெருமாள் நல்லூர் மங்களாம்பிகை சமேத விஷ்ணுவல்லபேஸ்வரர் கோயில் சனிதோஷம் நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. பரமேஸ்வரன் திருநாமத்துடன் விஷ்ணுவின் திருநாமமும் சேர்ந்துள்ளதால், இத்தலம் பெரிதும் போற்றப்படுகிறது.
மகாவிஷ்ணு சிவ தத்துவங்களை அறிந்து கொள்வதற்காக, சிவலிங்கத்தை பூஜை செய்து தவம் இருக்க எண்ணினார். அதற்கு தகுந்த இடத்தை தேடிக் கொண்டிருந்தபோது, இந்த ஊரைத் தேர்ந்தெடுத்து வில்வ மரத்தடியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, பூஜைகள் நடத்தி, தவம் இருந்தார். பரமேஸ்வரன் குருரூபமாக வந்து மகாவிஷ்ணுவுக்கு சிவ தத்துவங்களை எடுத்துரைத்தார். இதனாலேயே இவ்வூருக்கு பச்சை பெருமாள்நல்லூர் என்று பெயர் கிட்டியதாக கூறப்படுகிறது.