ராமபிரான் உணர்த்தும் சரணாகதி தத்துவம்

ராமபிரான் உணர்த்தும் சரணாகதி தத்துவம்
Updated on
2 min read

திருமால், மக்களை நல்வழிப்படுத்தி தர்ம நெறியை நிலைநாட்ட பூமியில் மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, கல்கி என்கிற பத்து அவதாரத்தை (தசாவதாரம்) எடுத்தார் என புராணங்கள் தெரிவிக்கின்றன. எட்டுத் தொகை, பத்துப்பாட்டு போன்ற நூல்களில் திருமால் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

தன்னிடம் முழுமையான பக்தியுடன் சரணடைந்தவர்களின் வாழ்க்கையை செழிப்படையச் செய்து அபயம் அளிக்கும் தன்மையை உடையவன் இறைவன். வைணவ நெறியில் முழு முதற்கடவுளான நாராயணன் என்கிற திருமாலின் திருவடியைச் சரணடைய வேண்டும் என்பதை திருமங்கையாழ்வார் ‘பெரிய திருமொழி’ யில் பாடியுள்ளார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in