மன அமைதி அருளும் நெடுங்குன்றம் ராமச்சந்திர பெருமாள்

மன அமைதி அருளும் நெடுங்குன்றம் ராமச்சந்திர பெருமாள்
Updated on
2 min read

700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் நெடுங்குன்றம் ராமச்சந்திர பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீராமர் அமர்ந்த நிலையில் உள்ளார். இத்தலத்தில் இருக்கும் ஸ்ரீராமரிடம் வில், அம்பு இருக்காது. அனுமன் கர்ப்பகிரகத்துக்குள்ளேயே இருப்பது சிறப்பு.

இலங்கையில் ராவணனோடு யுத்தம் முடிந்த பின்பு சீதாப்பிராட்டி மற்றும் லட்சுமணரோடு அயோத்தி கிளம்புகிறார் ராமபிரான். அப்படி செல்லும் வழியில் நெடுங்குன்றம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது மலையில் தவம் செய்து கொண்டிருக்கும் சுகப்பிரம்ம முனிவரின் ஆசிரமத்தை அடைந்தார். ராமபிரானைக் கண்ட முனிவர் மிகவும் மகிழ்ச்சியுடன் தனது அரிய சாஸ்திரங்களைக் கொண்ட ஓலைச்சுவடியை அவரிடம் கொடுத்துள்ளார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in