மகம் பிறந்த திருநல்லூர்

மகம் பிறந்த திருநல்லூர்
Updated on
2 min read

சோழநாட்டுத் தென்கரை தலமாக விளங்கும் திருநல்லூர் கோயில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பெற்ற மாடக் கோயில் ஆகும். திருநாவுக்கரசருக்குத் திருவடிசூட்டிய தலம், அமர்நீதி நாயனாரை ஆட்கொண்ட தலம், திருக்குடந்தை மகாமக நீராடலோடு தொடர்புடைய தலம் என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்டது இத்தலம்.

திருநல்லூர் இறைவன் பெயர் கல்யாண சுந்தரர். பெரியாண்டவர், பஞ்சவர்ணேசர், இறைவி பெயர் கல்யாண சுந்தரி, பர்வத சுந்தரி, கிரி சுந்தரி. தலமரம் வில்வம். தீர்த்தம் சப்த சாகர தீர்த்தம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல்பெற்ற இத்தலத்தில் அமர்நீதியார் மடாலயம் உள்ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in