வேண்டும் வரம் அருளும் தாமல் தாமோதர பெருமாள்

வேண்டும் வரம் அருளும் தாமல் தாமோதர பெருமாள்
Updated on
2 min read

ஆயர்பாடியில் நந்தகோபர் - யசோதை தம்பதியின் மகனாக கண்ணன் என்ற திருநாமத்துடன் மகாவிஷ்ணு வளர்ந்தார். சிறு பாலகனாக இருந்த கண்ணன், அங்கு பலவித விளையாடல்களை செய்தருளினார். அதில் ஒன்று வெண்ணெய்யை கவர்ந்து செல்லுதல் ஆகும். இதனால் கோபியர் அனைவரும் கண்ணன் மீது மிகுந்த கோபம் கொண்டனர்.

இதுதொடர்பாக யசோதை பிராட்டியிடம் முறையிட்டனர். வீட்டைவிட்டு கண்ணன் வெளியில் செல்வதைத் தடுக்க, கயிறால் பிணைத்து ஓர் உரலுடன் கண்ணனைக் கட்டிவைத்தாள் யசோதை. அப்போது கூட கண்ணனின் விளையாட்டு குறையவில்லை. உரலுடன் இரு மரங்களுக்கு இடையே புகுந்து இரண்டு தேவர்களுக்கு சாப விமோசனம் அளித்துள்ளார். கண்ணனின் வயிற்றில் கயிறு இறுகி அதன் தடம் ஏற்பட்டது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in