

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சக்கரபாணி பெருமாள் கோயிலில் திருமால் முக்கண்ணுடன் எழுந்தருளியுள்ளார். சோழர் காலத்தில் எழுப்பப்பட்ட இத்தலம் பாஸ்கர ஷேத்ரம் என்று அழைக்கப்படுகிறது.
ஜலந்தராசுரன் என்பவனை அழிக்கும் பொருட்டு சாரங்கபாணி சுவாமி திருச்சக்கரம் ஒன்றை அனுப்பினார். அந்த சக்கரம் பாதாள உலகில் உள்ள அசுரர்களை அழித்தது. மேலும் காவிரியில் பூமியைப் பிளந்து கொண்டு வெளியே வந்தது. அப்போது பிரம்மதேவர் கும்பகோணம் காவிரிக் கரையில் அமர்ந்து யாகம் செய்துக் கொண்டிருந்தார். அந்த திருச்சக்கரம் பிரம்மதேவர் கையில் வந்து அமர்ந்தது.