

மனிதனுக்கு உண்மையான செல்வம், நோய் நொடி இல்லாத வாழ்க்கை தான் என்று ஆன்றோர் பெருமக்கள் கூறுவர். மகாவிஷ்ணுவின் அம்சமான தன்வந்திரி பகவான், வேதங்களின் காவலர், தேவர்களின் மருத்துவர், ஆயுர்வேத மருத்துவத்தின் இறைவன் என்று போற்றப்படுகிறார்.
நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பண்ருட்டியில் வாழ்ந்த பெருமாள் பக்தர் ஒருவர் பல ஊர்களுக்குச் சென்று பெருமாளை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.