

தங்க நிற ஆடையில் தங்க கிரீடத்துடன் காசி திருத்தலத்தில் அருள்பாலிக்கும் அன்னபூரணியை தரிசிக்க, தினந்தோறும் எண்ணற்ற பக்தர்கள் வருகை புரிகின்றனர். வற்றாத உணவை அளிக்கும் அட்சயப் பாத்திரத்தை ஏந்தி இருப்பதால் சக்தி தேவி ‘அன்னபூரணி’ என்று போற்றப்படுகிறாள்.
வாராணசி பகுதியில் முன்பொரு காலத்தில்கடும் பஞ்சம் நிலவியது. அப்போது, அன்னைசக்திதேவி, திருமாலிடம் வேண்டி, அட்சயப் பாத்திரத்தைப் பெற்று, அனைவருக்கும் உணவளித்து வந்தாள். இன்றும் அன்னபூரணி கோயிலில் காலை 11 மணி அளவில் அனைவருக்கும் அன்னதானம் அளிக்கப்படுகிறது.