தடைகளை தகர்த்தெறியும் புன்னைநல்லூர் கோதண்டராமர்

தடைகளை தகர்த்தெறியும் புன்னைநல்லூர் கோதண்டராமர்
Updated on
2 min read

தஞ்சை மாவட்டத்தில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு மிக அருகில் அமைந்துள்ள கோதண்டராமர் கோயில் முக்தி தரும் தலமாக போற்றப்படுகிறது. காரியத் தடை நிவர்த்திக்கும், பிறவிப் பயன் அடையவும், பலவகை பாவங்கள் தீரவும் கோதண்டராமர் அருள்பாலிப்பார்.

வைணவ சம்பிர​தா​யத்​தில் மணமகன் வீட்​டாருக்கு துளசி மாடத்​தை​யும் சாளக்​கிராமத்​தை​யும் பெண்​வீட்​டார் அந்தக் காலத்​தில் வழங்கி வருவது வழக்​கம். சாளக்​கிராமம் என்ற கல், திரு​மாலின் அம்ச​மாகப் போற்​றப்​படு​கிறது. ஐந்தடி உயரம் கொண்​ட​வ​ராக, சாளக்​கிராம மூர்த்த மூலவராக நின்ற கோலத்​தில் சீதாபிராட்டி, லட்சுமணர், சுக்​ரீவனுடன் கோதண்​ட​ராமர் இத்தலத்​தில் சேவை சாதிக்​கிறார்.

ராமபிரான் வீற்றிருக்​கும் கருவறை விமானம் சௌந்​தர்ய விமானம் என்று அழைக்​கப்​படு​கிறது. ராஜ கோபுரம், பலி பீடம், திருச்​சுற்று, முன்​மண்​டபம், விமானம், கருவறை போன்ற அமைப்பு​களுடன் கோயில் அமைக்​கப்​பட்​டுள்​ளது. ராமபிரான், சீதாபிராட்டி, லட்சுமணர் உற்சவர் சிலைகள் 1,400 ஆண்டு கால பழமை வாய்ந்​ததாக கருதப்​படு​கின்றன. இவை இங்கிருந்து 25 கிமீ தூரத்​தில் உள்ள நீடா​மங்​கலம் அருகே பூவானூர் கிராமத்​தில் கண்டெடுக்​கப்​பட்​ட​தாகக் கூறு​வர்.

இத்தலம் கிபி 1739 – 1763-ல் கட்டப்​பட்​டது. நேபாள மன்னரின் மகளை தஞ்சை மன்னரின் மகனுக்கு நிச்​சயம் செய்​யப்​பட்​டது. இரு மன்னர்​களும் சம்பந்தி ஆனதால் தஞ்சை மன்னருக்கு ஏராளமான சீர்​வரி சைகளை வழங்​கினார் நேபாள மன்னர். நேபாள நாட்​டில் உள்ள கண்டிகை நதியில் சாளக்​கிராமங்கள் நிறைய தோன்​றும் என்று கூறு​வர். அந்த சீர்​வரிசைகளுடன் மிகப்​பெரிய சாளக்​கிராம கல்லை​யும் நேபாள மன்னர், தஞ்சை மன்னருக்கு அளித்​தார்.

அதன் பின்னர் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாபசிங் நிறைய நிலங்​கள், நிதி​யுதவி அளித்து கோபுரம், திருச்​சுற்றுகளுடன் இக்கோ​யிலைக் கட்டி​யுள்​ளார் என்று வரலாறு தெரிவிக்​கிறது. அந்தக் கல்லால் ஆன மூர்த்திகள் கருவறையை அலங்​கரிக்​கின்​றனர்.

மராட்டிய அரசி எழுனாம்​பாள் பாஹி சாஹேப் இக்கோ​யில் பணிகளுக்காக ஒட்டக்​குடி, ரிஷியூர், கொட்​டையூர், மகிமாலை ஆகிய கிராமங்​களில் உள்ள 138 ஏக்கர் நிலங்களை அளித்​தார். மேலும் மகாமண்​டபம் - துவஜஸ்​தம்பம் (கொடிமரம்) செப்புத் தகட்​டில் கிபி. 1892-ல் மராட்டிய மன்னன் சிவாஜி​யின் பட்டத்​தரசி காமாட்​சி​யம்பா பாஹி சாஹேப் செய்த திருப்​பணிகள் குறித்து எழுதப்​பட்​டிருப்​ப​தைக் காணலாம்.

திருக்​கோ​யிலுக்கு 12 படிகள் ஏறிச் செல்ல வேண்​டும். இது 12 ராசிகளைக் குறிப்​பிடு​வ​தாகக் கூறுவர். ராஜ கோபுரத்​தைக் கடந்து உள்ளே சென்​றால் தும்​பிக்கை ஆழ்வாரை தரிசிக்​கலாம். கொடிமரம் வட்டக் கல் மீது அமைந்​துள்ளது. அதன் அடிப்​பகு​தி​யில் கிழக்​குப் பக்கம் சீதை, ராமர், லட்சுமணருடன் அருள்​பாலிக்க, தெற்​குப் பக்கம் சங்கும், மேற்​குப் பக்கம் நாமமும், வடக்​குப் பக்கம் சக்கர​மும் அமைந்​துள்ளன. மண்டபத்​தின் உட்புறச்சுவர்​களில் கருடாழ்​வார், ஆஞ்சநேயர், ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக ஓவியங்​களைக் காணலாம். கொடிமரத்தை ஒட்டிய சந்நி​தி​யில் கருடாழ்​வார் அருள்​பாலிக்​கிறார்.

மாதந்​தோறும் நவமி திருநாளி​லும், புனர்பூச நட்சத்திர நாளி​லும் விசேஷ பூஜைகள் நடைபெறும். வாரந்​தோறும் புதன், சனிக்​கிழமை​களில் கோதண்​ட​ராமருக்கு துளசி மாலை சாற்றி, பக்தர்கள் வணங்​குவது வழக்​கம். தொடர்ந்து ஒன்பது சனிக்​கிழமைகள் அல்லது ஒன்பது புதன்​கிழமைகள் வந்து வழிபட்​டால், இழந்ததை மீட்​கலாம், உத்தி​யோகம் சிறக்​கும், பதவி உயர்வு கிடைக்​கும் என்பது பக்தர்​களின் நம்பிக்கை.

பிரகாரத்​தில் சக்கரத்​தாழ்​வார், ஜயவீர ஆஞ்சநேயர், யோக நரசிம்​மர், நிகமாந்த மகாதேசிகன், நம்மாழ்​வார், திரு​மங்​கை​யாழ்​வார், உடையவர் சந்நி​தி​களை​யும், தல விருட்​சமான புன்னை மரத்​தை​யும் தரிசிக்​கலாம். பிரகார சுற்றுச் சுவர்​களில் ராமாயண ஓவியக் காட்​சிகளைக் காணலாம். மூலஸ்​தானத்​தில் வலக்கை​யில் சரமும் இடக்கை​யில் கோதண்​ட​மும் திகழ கோதண்​ட​ராமர் அருள்​பாலிக்​கிறார். வலப்புறம் சீதாபிராட்​டி​யும் இடப்புறம் இளைய பெரு​மாள் லட்சுமணரும் நின்ற கோலத்​தில் அருள்​பாலிக்​கின்​றனர். அருகே அமர்ந்த நிலை​யில் ஆஞ்சநேயர் உள்ளார்.

கோயி​லில் புன்னை மரத்​தடி​யில் ஸ்ரீராமர் பாதம், பெரிய தேர் இருந்​ததற்கு சாட்​சியாக தேரடி மண்டபம், மண்டபத்​தின் மேல்​தளத்​தில் லட்சுமி ஹயக்​ரீவர் சந்நி​தி​களைக் காணலாம். இங்குள்ள மகா சுதர்​சனரை வழிபட்​டால் நீண்ட ஆயுளும், நீங்காத செல்​வ​மும் பெற்று அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும். மேற்​கூரை​யில் பன்னிரண்டு ராசி மண்டலம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. அதற்கு நேராக தரையில் ராசிக் கட்​டங்​கள் அந்​தந்த ராசிக்​குரிய வண்​ணங்​களு​டன் தீட்​டப்​பட்​டுள்ளன. அவர​வர் ராசிக்​கேற்ற கட்​டத்​தில் நின்று வேண்​டிக் ​கொண்​டால் ராசிரீ​தியான குறை​கள் நீங்கி அனைத்து ​காரி​யங்​களும் சித்தி​யாகும் என்பது நம்​பிக்கை.

அமை​விடம்: தஞ்சாவூரில் இருந்து 7 கிமீ தொலை​வில்​ உள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in