மனம் நம் கட்டுப்பாட்டில் இருந்தால் வெற்றி நிச்சயம்

மனம் நம் கட்டுப்பாட்டில் இருந்தால் வெற்றி நிச்சயம்
Updated on
2 min read

மனம் நம் கட்டுப்பாட்டில் இருந்தால் நிச்சயம் வெற்றி அடையலாம் என்பது ஆன்றோர் வாக்கு. எண்ணங்களே நம்மை உருவாக்குகின்றன. ஒருமுகப்பட்ட மனதுடன் எதை செய்தாலும் அதில் வெற்றி பெற முடியும். அரைகுறை மனதுடன் செய்வதால் வெற்றி எட்டாக் கனி ஆகிவிடும். உடலில் நாம் வசிக்​கிறோம். மனதின் கட்டளைப்படி செயல்களை செய்​கிறோம். உடல்​-மனம் என இரு கருவி​களின் மூலம் மட்டுமே வாழ்வை எதிர்​கொள்​கிறோம்.

மற்ற உயிரினங்​களுக்கு மனம் இல்லை. கணினி​யில் மென்​பொருள் பயன்​படுத்​தப்​படு​வதைப் போல் வாழ்​நாள் முழு​வதும், சுய கருத்து இன்றி ஒரே மாதிரியான செயல்களை செய்து அவை மடிகின்றன. சிந்​திப்​ப​தில்லை. அலசி ஆராய்​வ​தில்லை. எதையும் விரும்பி தேர்ந்​தெடுப்​ப​தில்லை. முட்​டையி​லிருந்து வெளிவந்​தவுடன் லாவகமாக தத்தி சென்று தண்ணீரில் நீந்​துகிறது வாத்து. யார் அதற்கு நீந்த கற்றுக்​கொடுத்​தது? இயற்​கை​யாகவே டிஎன்​ஏ​வில் பதியப்​பட்​டுள்​ளது.

ஆனால் சிந்​திக்​கும் மனதை உடையவன் மனிதன். ‘மன்’ என்ற சம்ஸ்​கிருத சொல்​லுக்கு ‘நினைப்​பது’என்று பொருள். ‘மன்’ நினைப்​பது. அதனால் ‘மநுஷ்யன்’ சிந்​திக்​கும் குணம் பெற்​றவனாகிறான். இன்ப-துன்​பங்களை உணர்ந்து அனுப​விப்பது என இரு செயல்களை செய்​கிறது.உடலை பாது​காக்க உடற்​ப​யிற்சி செய்​கிறோம். மருத்​துவரை அணுகி சிகிச்சை பெறுகிறோம். மனத்​தைப் பற்றி சிந்​திப்​ப​தில்லை.

ஏனெனில் கை, கால், கண், மூக்கு, நாக்கு என்ப​தைப்​போல் அது உடல் உறுப்பு இல்லை. கண்ணுக்கு தெரிவ​தில்லை. ஒன்றி​லிருந்து மற்றொன்​றுக்குதாவுவதே மனதின் இயல்பு. ஐம்புலன்​களின் மூலம் மகிழ்ச்சி, பயம், துக்​கம், பொறாமை என அனைத்​தை​யும் மனம் அனுபவிக்​கிறது. கற்பனைத் திறன் உடையது.

கவிதை புனை​யும். கதை, கட்டுரை எழுதும். தன்னைத் தவிர மற்ற எல்லா​வற்​றைப் பற்றி மட்டுமே மனம் சிந்​திக்​கும். மனமே எல்லா உணர்ச்​சி​யும் எண்ண​மும். மனம் தன்னை அறியாது. தன்னைத்​தவிர உலகிலுள்ள எல்லா​வற்​றை​யும் தெரிந்​து​கொள்ள, நினைக்க, அனுபவிக்க, புரிந்​து​கொள்ள விழைகிறது. மனம் எதை உணர்​கிறதோ அதை நாம் என நினைக்​கிறோம். நாம் என்பது நம் மனம் என்ற எண்ணத்​தில் வாழ்​கிறோம்.

வீடு, நிலம், கணவன்​/மனைவி, குழந்தை​கள், பதவி இவை நம்மைச் சார்ந்​தவை. இவையெல்​லாம் இல்லாமலும் உயிர் வாழ முடி​யும். அதைப்​போல் அனுபவம், எண்ணம், பிடித்​தது-பிடிக்​காதது, சுக-துக்கம் இவையெல்​லாம் மனதுடன் தொடர்​புடையவை. இவையெல்​லாம் இல்லாமல் மனதில் எந்த சலனமுமின்றி அமைதியாக இருக்க முடி​யும்.

நல்ல செயல்களை செய்​யும்​போதுகூட தவறு செய்​கிறோம். தவறை உணர்ந்து, மீண்​டும் தவறு நேராமல் எச்சரிக்கை​யுடன் இருக்​கலாம். பயத்​தால் தவறை மறைத்து பொய் சொல்​கிறோம். பயமே மனதை கெடுக்​கிறது. நாம் சொன்ன பொய் வெளிப்​பட்​டால் அவமானம். இதுவே சஞ்சலத்​துக்கு காரணம். சந்தோஷமாக அரட்டை அடித்​துக் கொண்​டிருப்​போம். அடுத்த நொடி பூமி கொஞ்சம் ஆடினால், நிலநடுக்கம் ஏற்பட்​டால்? பயம் கவ்வு​கிறது.

இதுவே மனதின் தன்மை. எல்லா பயத்​துக்​கும் மூல காரணம் மனம். பயம் துக்​கத்​துக்கு காரணம். பல பயங்களை மனம் கற்பனை செய்​கிறது. மனதிலிருந்து விடு​பட்டு புத்​திபூர்​வமாக சிந்​திக்கமனதை பழக்குவதே நாம் செய்​ய​வேண்டிய பணி.

கட்டற்ற தன்னியல்பான அறிவாற்றலை பயன்​படுத்த வேண்​டும். உடல் - உடைமை இவற்றில் பற்றுள்ளது மனம். வங்கி​யில் உள்ள நம் பணம் சைபர் கிரைமில் [Cyber Crime] களவு போவது, பாம்​பு-தேள் கடி, விபத்​தில் உடல் ஊனமுறுவது என எதிர்​பாராத இன்னல்கள் சூழும்​போது நிலைகுலைந்து போகிறோம்.

கவலையை மறக்க பலவற்றுக்கு அடிமை ஆகிறோம். மீண்​டும் அந்த வட்டத்​திலிருந்து வெளிவர​முடி​யாமல் அவதிப்​படு​கிறோம். இது ஒரு மனநோய். அதை குணப்​படுத்த முடி​யாமல் நடைப்​பிணமாக பலர் வாழ்​கின்​றனர். நான் மிக நல்ல​வன் ஆனால் மனம் ஒத்துழைப்​ப​தில்லை என எண்ணுகிறோம்.

மனம் இன்னொன்றை அறிந்​தும், உணர்ந்​தும் சுக துக்​கத்தை அனுபவிக்​கிறது. அந்த மனதை அறிந்து உணர்ந்​தால் அதை கட்டுப்​படுத்த முடி​யும். இதை புரிந்​து​கொண்​டால் சரியாக முடி​வெடுத்து, செயல்களை செய்து மகிழ்ச்​சி​யுடன் வாழலாம். பயிற்​சி​யின் மூலமே இதை சாதிக்க முடி​யும். இது கடினம் என எண்ணலாம். நாளடை​வில் மனம் நம் வசப்​படும். நாம் மனதுக்கு முதலா​ளி​யாகி கட்டளை இடமுடி​யும். பயிற்சி பழக்​கமாக பரிணமித்து சரியான செயல்களை மட்டும் செய்​வோம். இதுவே முடி​வெடுக்​கும் திறன். இதனால் நம்மை நாமே உயர்த்திக் கொள்​ளலாம் .

குரங்​காட்டி குச்​சி​யால் அடித்து, தன் சொல்படி ஆட பயிற்சி அளித்து குரங்கை தயார் செய்​கிறான். குரங்கு குச்​சிக்கு கட்டுப்​படும். மனம் அறிவுக்கு மட்டுமே கட்டுப்​படும். அறிவின் துணை கொண்டு மன தடைகளை தகர்த்​தெறிய வேண்​டும். மனமே பிரச்​சினை ஆகிவிடக் கூடாது. பிரச்​சினைகளை தீர்க்க மனதை பழக்க வேண்​டும். மனதை நிலைப்​படுத்த தியானம், யோகாசனம், உடற்​ப​யிற்சி, ஓரளவுக்கு உதவும். மனவோட்​டத்தை தடுக்க தொடர் பயிற்சி தேவை. இளமை​யில் பயில்வது சிறந்​தது.

அதிருப்தி, கோபம், பொறாமை, அழுகை என எத்தனை பிரச்​சினைகள் இருந்​தா​லும் நல்ல மனநிலை​யில் எந்த கஷ்ட​மும் நம்மை பாதிக்​காது. நல்லெண்​ணங்களே நம் தோழர்​கள். தீய எண்ணங்கள் நம் எதிரி​கள். நல்லெண்ணம் பூவிலிருக்​கும் தேன், நறுமணம் ​போன்​றது. கெட்ட எண்​ணம் துர்​நாற்​றம் ​போன்​றது. நம்​பிக்கை, ஆர்​வம், ஊக்​கம், உற்​சாகம், ஆவலுடன் செயல்களை செய்ய பழக வேண்​டும். பல​வீனமான மனதை கை​விட்டு, செயல்களை செய்​வதன்​மூலம் நம்மை நாமே உயர்த்திக் ​கொள்ள ​முடி​யும். வாழ்​வில் ​முன்​னேறலாம்​. வெற்​றியடையலாம்​.

- (sri.tsrt@gmail.com )

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in