Published : 04 Apr 2024 06:15 AM
Last Updated : 04 Apr 2024 06:15 AM
திருச்சிராப் பள்ளிக்கு வடக்கே காவிரியின் வடகரையில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள சமயபுரத்தில், மாரியம்மன் 8 கைகளுடன், தலை மாலை கழுத்தில், சர்ப்பக் குடையுடன், 5 அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார். பக்தர்களுக்காக ஆண்டாண்டு காலமாக 28 நாட்கள் சமயபுரம் மாரியம்மன் உண்ணா நோன்பு இருந்து வரும் நிகழ்வு அதிசயமான நிகழ்வாகும்.
சக்தி ஸ்தலங்களில் முதன்மையான சமயபுரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும், தாய்க்கெல்லாம் தாயான மாரியம்மன், உலகில் எங்கும் இல்லாத வகையில், தன் பிள்ளைகளான உலக மக்கள் எந்தவிதமான நோய்களும், தீயவினைகளும் அணுகாமல் சகல சௌபாக்கியங்களுடன் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக பச்சைபட்டினி என்ற கடுமையான விரதத்தை காலம் காலமாக ஆண்டுதோறும் பங்குனி, சித்திரை மாதங்களில் கடைபிடித்து வருகிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT