Last Updated : 11 Jan, 2024 06:12 AM

 

Published : 11 Jan 2024 06:12 AM
Last Updated : 11 Jan 2024 06:12 AM

ப்ரீமியம்
திருப்புட்குழி சுவாமியின் 200-ஆவது திருநட்சத்திர மகோற்சவம்

திருப்புட்குழி சுவாமி

‘ஸ்ரீ காஞ்சி பேரருளாளன்’ என்கிற ஆன்மிக மாதப் பத்திரிகையின் நிறுவனரான திருப்புட்குழி ஸ்ரீ லட்சுமிகுமார தாத தேசிகனின் வம்சாவளியில் 1823ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் திருப்புட்குழி சுவாமி என்று அழைக்கப்படும் ஸ்ரீகிருஷ்ண தாதாசார்ய மகாதேசிகன் பிறந்தார். சிறுவயதில் அழுகையை நிறுத்தாமல் இருந்த இவர், காஞ்சிபுரம் பெருந்தேவித் தாயாருக்கு நிவேதனம் செய்த பாலை அருந்தியதும் தன் அழுகையை நிறுத்திக்கொண்டதால் தெய்வக் குழந்தையாகவே போற்றப்பட்டார்.

தனது 12ஆவது வயதுக்குள் அனைத்து வேத சாஸ்திரங்களையும் பயின்றார். காவ்ய நாடகங்களைப் பயின்றாலும் அவற்றில் உள்ள சுலோகங்களிலேயே அவரது கவனம் இருந்தது. ஹயக்ரீவரின் அருள் பெற்றவராகப் போற்றப்பட்ட திருப்புட்குழி சுவாமி, பண்டிதர்கள் பலரிடம் இருந்து ஜோதிடம், சங்கீதம், அத்வைதம், த்வைதம், ஸாங்க்யம், யோகம், பரத சாஸ்திரம், மந்திர சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்தார். இவர் காஞ்சிபுரத்தில் பலருக்கு அத்வைத, த்வைத பயிற்சியை அளித்துவந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x