Last Updated : 14 Dec, 2023 06:15 AM

 

Published : 14 Dec 2023 06:15 AM
Last Updated : 14 Dec 2023 06:15 AM

ப்ரீமியம்
முன் ஜென்ம வினைகள் நீக்கும் அம்மனூர் அகத்தீஸ்வரர்

திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக்காட்டில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ள அம்மனூர் அகத்தீஸ்வரர் கோயில், முன் ஜென்ம வினைகள் தீர்க்கும் தலமாகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில் நவகிரக சந்நிதி கிடையாது. சனிஸ்வரர், சூரியன், சந்திரனுக்கு தனித்தனி சந்நிதிகள் இருப்பது தனிச்சிறப்பு.

தல வரலாறு: பார்வதி - சிவபெருமானின் திருக்கல்யாண வைபவம் வடக்கே கயிலாய மலையில் நடந்தபோது, அதைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும் பிரம்மதேவர், திருமால், இந்திரன், சரஸ்வதி, திருமகள், அஷ்ட திக்பாலகர்களும் அங்கே கூடியிருந்தனர். இந்தச் சுமையைத் தாங்காமல் பூமியின் வடதிசை தாழ்ந்து, தென் திசை உயர்ந்தது. பூமியைச் சமநிலைப்படுத்த சிவபெருமான் அகத்தியரைத் தென் திசைக்கு அனுப்பினார். அகத்திய முனிவரும் சிவபெருமானின் ஆணைக்கிணங்க தென் திசை நோக்கிப் பயணித்தார். தென் திசையை அடைந்த அகத்திய முனிவர், தன் கமண்டலத்தில் இருந்து சிறிது நீரை எடுத்து ‘ஓம் நமசிவாய’ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்துப் பூமியில் தெளித்தார்; பூமி சமநிலை அடைந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x