Published : 16 Nov 2023 06:27 AM
Last Updated : 16 Nov 2023 06:27 AM
குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தின் வடகிழக்கில் மெஸ்வோ நதிக்கரையில் ஷாமலாஜி கோயில் உள்ளது. 1,500 ஆண்டு பழைய கோயில் எனக் கூறப்பட்டாலும், நமக்குத் தெரிந்த தகவல்களின்படி கோயில் நிர்மாணிக்கப்பட்டது 15, 16ஆம் நூற்றாண்டில்தான் எனக் கருதப்படுகின்றது. இதனை ஒட்டி சரணாலயம் உள்ளது. அதனுள் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அற்புதமான பள்ளிகொண்ட விஷ்ணு சிலை உள்ளது. சுற்றிக் கோட்டம் உள்ளது. சோசாலை உள்ளது. கோயிலைச் சுற்றி அடர்ந்த வனங்களைக் கொண்ட மலைகள் உள்ளன.
உயரத்தில் சமாதானம்: கோயில் மீது வெள்ளைக் கொடி பறப்பதால் இதனை `தஜாவலே' எனவும் அழைக்கின்றனர். முழுவதும் வெள்ளை, சிவப்பு காரைக் கல் மற்றும் செங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. சுற்றுச்சுவர் கட்டப் பட்டுள்ளது. கோயிலின் உயரம் 320 அடி. பிரம்மாண்டமான இந்தக் கோயிலின் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது. இங்கு ஒரு சமயம், விஸ்வகர்மா ஓர் இரவுக்குள் கோயிலை கட்டிமுடித்து அதனை தேவ உலகிற்கு எடுத்துச் செல்ல விரும்பினாராம். ஆனால் கட்டிமுடித்த போது, விடிந்துவிட்டதாம். இங்கேயே விட்டுவிட்டுச் சென்று விட்டாராம்! அதனால்தான் இந்தக் கோயில் இவ்வளவு அழகு என்கின்றனர் அந்தப் பகுதியில் வாழும் மக்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT