Published : 19 Oct 2023 06:15 AM
Last Updated : 19 Oct 2023 06:15 AM

ப்ரீமியம்
காமனின் தொழிலைச் செய்த அம்பிகை 

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஸ்ரீ காமகலா காமேஸ்வரர் ஆலயம், ஈசனின் திருவிளையாடலையும் அம்பிகையின் அவதாரத்தையும் பறைசாற்றுகிறது. ஒரு முறை தட்சன் ஒரு யாகம் செய்தான். அம்பிகை தட்சனின் மகளாகப் பிறந்து ஈசனின் மனைவியாக இருந்தும், தட்சன் தன் மருமகனையும் மகளையும் யாகத்துக்கு அழைக்கவில்லை. அந்த யாகத்துக்குப் போக வேண்டும் என்று ஈசனிடம் தாட்சாயணி மன்றாடினாள். அதற்கு அவர் உடன்படவில்லை. தன் கணவனின் அனுமதியில்லாமல் தனியாக அந்த யாகத்துக்கு அம்பிகை சென்றாள்.

தட்சன் தன் மகளைத் தகுந்த முறையில் வரவேற்காமல் அவமதித்தான். இதைக் கண்ட அம்பிகை கோபம் கொண்டாள். ஈசனும் வெகுண்டெழுந்து வீரபத்திரரைத் தோற்றுவித்து யாகத்தை அழித்து, தட்சனின் ஆணவத்தை அடக்கினார். ஈசனின் திருவிளையாடல்கள் பல. அதில் இதுவும் ஒன்று. பர்வதராஜனின் மகளாக அம்பிகை அவதரிக்க வேண்டும் என்பதற்காகவும் சூரனை அழிக்க ஒரு மகளைத் தோற்றுவிக்கவும் இந்தத் திருவிளையாடல் நடத்தப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x