Published : 29 Jun 2023 06:36 AM
Last Updated : 29 Jun 2023 06:36 AM

ப்ரீமியம்
சுயம்புவாய் மெய்ஞ்ஞானமடைந்த ஞானி!

பொது ஆண்டுக்கு முன் (கி.மு.) 623ஆம் ஆண்டில் இமயமலை பகுதி அருகில் அமைந்துள்ள அன்றைய சாக்கிய நாட்டில் (இன்றைய நேபாளம்) கபிலவஸ்து, லும்பினித் தோட்டம், சால மரத்தடியில் சாக்கிய மன்னர் சுத்தோதனருக்கும் மகாராணி மகாமாயாதேவிக்கும் சித்தார்த்த கெளதமர் பிறந்தார். அவர் பிறந்தவுடன் ஏழு காலடிகள் எடுத்து வைத்தார் என்றும் அந்த ஏழு காலடியிலும் அழகிய தாமரை மலர்கள் மலர்ந்ததாகவும் பெளத்த நூல்கள் கூறுகின்றன.

இளவரசர் சித்தார்த்த கெளதமர் வெவ்வெறு காலகட்டங்களில் கண்டுணர்ந்த நான்கு காட்சிகளின் (வயது முதிர்ந்தவர், நோயுற்றவர், இறந்தவரின் உடல், அமைதியான துறவி) மூலம் அவரின் மனத்தில் இருந்த தேடல் வெளிப்பட்டது. மனித குலத்தின் துன்பத் துக்கான காரணங்களைத் தேடி 29 வயதில் சுகபோக வாழ்க்கையைத் துறந்து, அரண்மனை யிலிருந்து வெளியேறி ‘உயரிய துறவு’ பூண்டார். பல யோக, தியான முறைகளை அறிந்து குறுகிய காலத்தில் உயர்நிலை தேர்ச்சி அடைந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x