சிதம்பர (ரகசியம்) உளுந்து: புவிசார் குறியீடு கிடைக்குமா?

சிதம்பர (ரகசியம்) உளுந்து: புவிசார் குறியீடு கிடைக்குமா?
Updated on
2 min read

முன்பெல்லாம் விசேஷ நாட்களில் மட்டும்தான் நமது வீடுகளில் இட்லி, தோசை போன்ற உணவு வகைகளை சமைப்பார்கள். அதனால் எப்போதாவது கிடைக்கும் பண்டமாக இருந்தன. ஆனால், கால சூழல் காரணமாக, இப்போது, இட்லியும், தோசையும் பல வீடுகளில் தினசரி உணவாக மாறிவிட்டது. அதேபோல் வடையும் இப்போது அடிக்கடி சாப்பிடுகின்றனர்.

இந்த உணவு வகைகளுக்கு அடிப்​படை​யாக இருப்​பது உளுந்​து. வெள்ளை உளுந்​தை​விட கருப்பு உளுந்​தில் செய்​யப்​படும் இட்​லி, வடை வகைகள் கூடு​தல் சுவை​யுடன் திகழ்​கின்​றன. குறிப்​பாக, கடலூர் மாவட்​டம் சிதம்​பரம் மற்​றும்அதனைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் விளை​யும் உளுந்​து, தமிழகத்​தின் பிற பகு​தி​களில் விளை​யும் உளுந்தை விட சில தனித்​து​வ​மான சிறப்​பு​களைக் கொண்​டுள்​ளது.

சிதம்​பரம் பகு​தி​களில் விளை​யும் கருப்பு உளுந்து அதி​கச் சுவையைத் தரு​கிறது. மற்ற உளுந்து வகைகளை​விட, சிதம்​பரம் உளுந்து நல்ல திரட்​சி​யாக இருப்​ப​தால் அதிக அளவு மாவு கிடைக்​கிறது. இதனால் தாய்​மார்​கள் மிக​வும் விரும்பி வாங்​கு​கின்​றனர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in