நிலமும் வளமும்
மண்ணையும், மக்களையும் காக்க… | நம்மாழ்வார் சொன்னது
விவசாய உற்பத்தியைப் பல மடங்காகப் பெருக்க வந்த அபூர்வங்கள் என, ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் ஐரோப்பிய நாடுகள் தொடக்கத்தில் கொண்டாடின.
ஆனால், இவைகளால் பெரிய பலன்கள் எதுவும் கிடைக்காது என்பதையும், இருக்கும் வளங்களையும் அழித்துவிடக் கூடியவை என்பதையும் அந்நாடுகள் விரைவிலேயே தெரிந்துகொண்டன. அதனால், அந்த நாடுகள் எல்லாம் இயற்கை விவசாயத்தை நோக்கி மீண்டும் மிக வேகமாகத் திரும்பிக் கொண்டிருக்கின்றன.
