சிக்கலில் இருந்து விடுபட வழிகாட்டும் சிக்கிம்

சிக்கலில் இருந்து விடுபட வழிகாட்டும் சிக்கிம்
Updated on
2 min read

இந்​தியா உணவு தானிய உற்​பத்​தி​யில் பெரும் பாய்ச்​சலை நிகழ்த்​தி​யதற்கு பசுமை புரட்​சி​தான் பிர​தான காரணம் என்​ப​தில் மாற்று கருத்து இருக்க முடி​யாது. உணவுப் பொருட்​களுக்​காக வெளி​நாடு​களை சார்ந்​திருந்த நிலை மாறி, இன்று பல விவ​சாய விளைபொருட்​களை ஏற்​றுமதி செய்​யும் அளவுக்கு நாடு தன்​னிறைவு பெற்​றுள்​ளதை யாரும் மறுக்க இயலாது.

எனினும், இந்​தி​யா​வில் விவ​சா​யத் துறை வளர்ந்திருந்தாலும், இந்​திய விவ​சா​யி​யின் வாழ்க்​கை​யில் அந்த வளர்ச்சி போதிய தாக்​கத்தை ஏற்​படுத்​த​வில்லை என்​பது உண்​மை. விதைகள், உரங்​கள், பூச்​சிக்​ கொல்​லிகள் சார்ந்த வணி​கம் இந்​தி​யா​வில் பன்​மடங்கு வளர்ந்​துள்​ளது. ஆனால், உணவுப் பொருள்​களை உற்​பத்தி செய்து தரும் விவ​சா​யி​யின் விளைபொருட்​களுக்கு போதிய விலை கிடைக்​க​வில்​லை.

மாறாக, சாகுபடிக்​குத் தேவை​யான இடு​பொருட்​களுக்கு விவ​சாயி செல​வழிக்​கும் தொகை ஆண்​டுக்கு ஆண்டு அதி​கரித்​த​படியே உள்​ளது. இந்த காரணங்​களால், வளர்ச்​சி​யின் பலன்​கள் விவ​சா​யிகளுக்​கும் கிடைக்​கும் வகையி​லான நீடித்த மற்​றும் நிலை​யான வளர்ச்சி இந்​தி​யா​வில் எப்​போது சாத்​தி​ய​மாகும் என்​பது பெரும் கவலைக்​குரிய விசய​மாக இங்கு விவா​திக்​கப்​பட்​டுக் கொண்​டிருக்​கிறது.

பசுமைப் புரட்​சி​யால் இந்​திய விவ​சாய சாகுபடி முறை​களில் ரசாயனங்​களின் பயன்​பாடு தொடங்​கியது. இந்​தப் பயன்​பாடு என்​பது அமெரிக்​கா​விலும், ஐரோப்​பிய நாடு​களி​லும், மலேசியா உள்​ளிட்ட சிறிய நாடு​களி​லும் கூட குறிப்​பிட்ட வரையறை​களின் கட்​டுப்​பாட்​டுக்​குள் உள்​ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in