தாளவரை காபி தூளுக்கு தனி பிராண்ட்: பழங்குடி இளைஞரின் மகத்தான சாதனை

தாளவரை காபி தூளுக்கு தனி பிராண்ட்: பழங்குடி இளைஞரின் மகத்தான சாதனை
Updated on
2 min read

நீல​கிரி மாவட்​டத்​தில் கடந்த 1879ம் ஆண்டு 10 ஆயிரத்து 117 ஹெக்​டேர் பரப்​பள​வில் காபி பயி​ரிடப்​பட்​டிருந்​தது. மாவட்​டத்​தில் தேயிலை அறி​முக​மான பின்​னர் விவ​சா​யிகள் காபியை விட்டு தேயிலை பயி​ரிட தொடங்​கினர். கூடலூர், கோத்​தகிரி சுற்​று​வட்​டார பகு​தி​களில் தேயிலை தோட்​டங்​களின் நடுவே ஊடு​ப​யி​ராக காபி மற்​றும் மிளகு ஆகியவை பயி​ரிடப்​பட்​டது.

தேயிலைக்கு நிலை​யான விலை கிடைக்​காத சூழலில், இந்த ஊடு பயிர்​கள் மூல​மாக விவ​சா​யிகள் ஓரளவுக்கு வரு​மானம் ஈட்டி வரு​கின்​றனர். தற்​போது தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்​பட்​டுள்​ள​தால், ஊடு​ப​யிர்​களாக இருந்த காபி மற்​றும் குரு​மிளகு மீண்​டும் முக்​கிய பயிர்​களாக மாறி​யுள்​ளன.

இந்​தி​யா​வில் ரோபஸ்டா மற்​றும் அரேபிகா என இரண்டு ரக காபி உற்​பத்தி செய்​யப்​படு​கிறது. இந்​தி​யா​விலிருந்து இத்​தாலி, ரஷ்​யா, ஜெர்​மனி, பெல்​ஜி​யம், ஸ்பெ​யின் ஆகிய நாடு​களுக்கு காபி ஏற்​றுமதி செய்​யப்​படு​கிறது. இதில், அரேபிகா ரக காபி தூளுக்கு கிராக்கி அதி​கம்.

இந்​நிலை​யில், நீல​கிரி மாவட்​டத்​தில் குன்​னூர், கூடலூர், கோத்​தகிரி பகு​தி​களில் பல விவ​சா​யிகள் இப்​போது தேயிலை செடிகளை நீக்கி விட்டு காபிவிவ​சா​யத்​துக்கு மாறி​யுள்​ளனர். நீல​கிரி மாவட்​டம் கூடலூர், பந்​தலூர், கோத்​தகிரி பகு​தி​களில் சுமார் 8,333 ஏக்​கர் அளவுக்கு காபி சாகுபடி செய்​யப்​படு​கிறது.

கீழ்​கோத்​தகிரி செம்​ம​னாரை கிராமத்தை சேர்ந்த இருளர் பழங்​குடி​யினர், காபி உற்​பத்​தி​யில் புது முயற்​சி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். காபி சாகுபடி செய்து கொட்​டைகளை தனி​யாருக்கு விற்று சொற்ப பணம் பெற்று வந்த நிலை​யில், தாங்​களே காபி கொட்​டைகளை அரைத்​து, தூளாக்​கி, விற்​பனை செய்து தொழில் முனை​வோ​ராக மாறி வரு​கின்​றனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in