மண் வளப் பாதுகாப்பே தமிழ்நாட்டு விவசாயத்தின் பாதுகாப்பு

மண் வளப் பாதுகாப்பே தமிழ்நாட்டு விவசாயத்தின் பாதுகாப்பு
Updated on
2 min read

தமிழகத்தின் ஒட்டுமொத்த வேளாண்மைத் திறனும் பொருளாதார வளர்ச்சியும் மண்ணின் ஆரோக்​கி​யத்தைச் சார்ந்தே அமைந்துள்ளன. நம் மாநிலத்தின் நிலப்​பரப்பில் சுமார் 61% வரை செம்மண், கரிசல் மண் (16%) மற்றும் வண்டல் மண் (20%) என்ற வகைப்​பாட்டில் காணப்​படு​கின்றன.

மண் வளத்தின் இன்றியமையாமை பெருகி வரும் மக்கள் தொகைக்குத் தேவையான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வளமான மண் அத்தி​யா​வசி​ய​மானது. உற்பத்தி செலவை குறைத்து அதிக லாபம் பெறுவதற்கு முறையான மண்வள​மும், நல்ல விதைகளும், தொடர் பராமரிப்பும் முக்கியம்.

அனைத்து காலங்​களிலும் மண்ணின் வளம் பாதுகாக்கும் முறைகளை கடைப்​பிடிக்க வேண்டும். எந்த ஒரு சாகுபடிக்கு முன்பும், தோட்டக்கலை பயிர்​களுக்கும் மண்ணுக்​கேற்ற அடி உரம் இடுவது முக்கியம்.

பயிர்கள் செழித்து வளர்ந்து அதிக மகசூல் தர வேண்டு​மா​னால், பேரூட்ட சத்து​களுடன் நுண்ணூட்டச் சத்து​களும் சமச்சீராக இருக்க வேண்டும். மண்ணில் கரிமச் சத்துக்கள் (Organic Matter) போதுமான அளவு இருக்​கும்​போது, கடுமையான வறட்சி காலங்​களிலும் பயிர்​களுக்குத் தேவையான சத்து மற்றும் ஈரப்ப​தத்தைத் தக்கவைத்​துக்​கொள்ளும் ஆற்றல் மண்ணுக்குக் கிடைக்​கிறது.

தற்போதைய சவால்​கள்

தமிழக விளைநிலங்​களில் சத்துக் குறைபாடு அதிகரித்து வருவது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்​பட்​டுள்ளது. குறிப்பாக, அனைத்து மாவட்​டங்​களிலும் பெரும்​பாலான நிலங்​களில் சராசரியாக 90% தழைச்​சத்து குறைபாடும் 40 சதவீதம் மணிச்​சத்து, 35% சாம்பல் சத்து, துத்தநாக சத்து 45% கந்தகம் 50% மாங்கனிசு இரும்பு துத்த​நாகம் 30% மற்றும் அங்கக கரிமம் 60% வயல்களில் பற்றாக்​குறையாக உள்ளன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in