இடைத்தரகர்கள் இல்லாத மக்கள் நலச் சந்தை

இடைத்தரகர்கள் இல்லாத மக்கள் நலச் சந்தை
Updated on
2 min read

2022இல் வேலூர் காந்தி நகரில் தொடங்​கப்​பட்ட மக்கள் நலச் சந்​தை, இன்று வேலூர் மட்​டுமின்​றி, சுற்​றி​யுள்ள மாவட்​டங்​களி​லும் நுகர்​வோரிடம் பெரும் வரவேற்​பைப் பெற்​றுள்​ளது. இயற்கை வேளாண் விளைபொருட்​களை உற்​பத்தி செய்​யும் விவ​சா​யிகளுக்​கும், ஆரோக்​கிய​மான உணவுப் பொருட்​களை விரும்​பும் நுகர்​வோருக்​கும் இடையே பால​மாக இருந்து செயல்​பட்டு வரும் மக்​கள் நலச் சந்​தை, இப்​போது வேலூர் காந்தி நகர், ஆம்​பூர் நகரம் மற்​றும் மேல்​வெள்​ளம் பகு​தி​களில் மாதச் சந்​தை​யாக​வும், ஜங்​கலாபுரம் மற்​றும் சோளிங்​கர் பகு​தி​களில் வாரச் சந்​தை​யாக​வும் நடை​பெற்று வரு​கிறது.

லாப நோக்​கின்றி மக்​களுக்கு நஞ்​சில்லா உணவளிக்​கும் இலட்​சிய பணி செய்​வது, வியா​பாரத்​தன்​மை​களும் வியா​பாரி​களும் இல்​லாத மக்​களை நேசிப்​பதை மட்​டும் முதன்​மை​யாகக் கொண்ட சந்​தை, சமூக நலன் விரும்​பும் விவ​சா​யிகளை​யும் நுகர்​வோர்​களை​யும் கொண்​டது, தங்​கள் விளைபொருட்​களுக்​கான விலையை விவ​சா​யிகளே நிர்​ண​யம் செய்​வதற்​கான வாய்ப்​பு, விவ​சா​யத்​துக்​கும், விவ​சா​யிகளுக்​கும் பெருமை சேர்ப்​பது, பூமி​யின் சுற்​றுச்​சூழல் கெடு​வதைத் தடுத்​து, சூழல் காக்​கும் பேரியக்​கத்​தின் ஓர் அங்​க​மாக செயல்​படு​வது, விவ​சா​யிகளே நுகர்​வோர்​களாக​வும் தங்​களுக்​குள் விளைபொருட்​களை மாற்றி விற்​பனை செய்து கொள்​வது, விற்​கும் இடமாக மட்​டுமல்​லாமல் கற்​கும் களமாக​வும் பயன்​படுத்​துதல் மற்​றும் அறி​வியலும் தொழில்​நுட்​ப​மும் கொடுத்​துள்ள அறி​வினை சந்​தை​யுடன் இணைத்து செய​லாற்​றி, விவ​சா​யிகளுக்​கும், நுகர்​வோருக்​கும் பயன்​களை விளை​விப்​பது என பல உன்​னத​மான நோக்​கங்​களுக்​காக இந்த சந்தை செயல்​பட்டு வரு​கிறது.

வழக்​க​மான வார மற்​றும் மாதச் சந்தை மட்​டுமின்​றி, வேலூரில் உள்ள விஐடி கல்வி வளாகம், இங்கு நடை​பெறும் அரசு கண்​காட்​சிகள், ஆற்​காடு அரிசி திரு​விழா போன்ற சிறப்பு சந்​தைகளி​லும் மக்​கள் நலச் சந்தை பங்​கேற்​கிறது. தங்​கள் விளைபொருட்​களை விற்​ப​தற்​காக இங்கு வரும் விவ​சா​யிகளிடம் இருந்து சந்​தைக்​கான கட்​ட​ணம் என எது​வும் வசூல் செய்​யப்​படு​வது இல்​லை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in