எட்டயபுரம் அருகே அயன்வடமலாபுரம் பகுதியில் விளைந்த பனங்கிழங்குகளை அறுவடை செய்யும் தொழிலாளர்கள்.

எட்டயபுரம் அருகே அயன்வடமலாபுரம் பகுதியில் விளைந்த பனங்கிழங்குகளை அறுவடை செய்யும் தொழிலாளர்கள்.

சர்க்கரையை துரத்தும் அபூர்வ மருந்து: எட்டயபுரத்தில் எகிறும் பனங்கிழங்கு விளைச்சல்!

பொங்கலை பூரிப்போடு வரவேற்கும் தொழிலாளர்கள்
Published on

தமிழ்நாட்டின் மாநில மரம் என்ற அந்தஸ்து கொண்டது பனைமரம். வாழைபோல் தன்னை முழுமையாக மனிதப் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்துக் கொண்ட ஒரு மரம். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர், நுங்​கு, கருப்​பட்டி, பனங்​கற்​கண்​டு ஆகியவை ஆரோக்​கிய​மான உணவுப் பொருட்​களாக விளங்​கு​கின்​றன. ஓலை, பனங்​கட்​டைகள் ஆகியவை வீடு கட்​டும் பொருட்​களாக பயன்​படு​கின்​றன.

இவற்​றில் நுங்கு பரு​வம் கடந்​து​விட்​டால், அது பனம் பழமாகிறது. பனம் பழம் காய்ந்து அதிலிருந்து கிடைக்​கும் பனை விதைகளை மணற்​பாங்​கான பகு​தி​களில் விதைத்​தால் பனங்கிழங்கு கிடைக்​கிறது. ஒவ்​வொரு ஆண்​டும் பொங்​கல் பண்​டிகை வழி​பாட்​டில், தானி​யங்​கள், நெல் மணி​கள், காய்​கறிகளு​டன், பனங்​கிழங்​களும் பிர​தான​மாக இடம்​பெறும்.

தூத்​துக்​குடி மாவட்​டத்​தின் வடபகு​தி​யான எட்​டயபுரம் அருகே தாப்​பாத்​தி, அயன் ​வடமலாபுரம் மற்​றும் வைப்​பாற்று கரையோரப் பகு​தி​யில் சுமார் 2 லட்​சம் பனை மரங்​கள் உள்​ளன. இதனை நம்பி சுமார் ஆயிரம் தொழிலா​ளர்​கள் உள்​ளனர். இங்கு ஆண்​டுதோறும் பிப்​ர​வரி கடைசி முதல் ஜூலை வரை​யிலும் பதநீர் உற்​பத்தி கால​மாகும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in