சர்க்கரையை துரத்தும் அபூர்வ மருந்து: எட்டயபுரத்தில் எகிறும் பனங்கிழங்கு விளைச்சல்!

பொங்கலை பூரிப்போடு வரவேற்கும் தொழிலாளர்கள்
எட்டயபுரம் அருகே அயன்வடமலாபுரம் பகுதியில் விளைந்த பனங்கிழங்குகளை அறுவடை செய்யும் தொழிலாளர்கள்.

எட்டயபுரம் அருகே அயன்வடமலாபுரம் பகுதியில் விளைந்த பனங்கிழங்குகளை அறுவடை செய்யும் தொழிலாளர்கள்.

Updated on
2 min read

தமிழ்நாட்டின் மாநில மரம் என்ற அந்தஸ்து கொண்டது பனைமரம். வாழைபோல் தன்னை முழுமையாக மனிதப் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்துக் கொண்ட ஒரு மரம். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர், நுங்​கு, கருப்​பட்டி, பனங்​கற்​கண்​டு ஆகியவை ஆரோக்​கிய​மான உணவுப் பொருட்​களாக விளங்​கு​கின்​றன. ஓலை, பனங்​கட்​டைகள் ஆகியவை வீடு கட்​டும் பொருட்​களாக பயன்​படு​கின்​றன.

இவற்​றில் நுங்கு பரு​வம் கடந்​து​விட்​டால், அது பனம் பழமாகிறது. பனம் பழம் காய்ந்து அதிலிருந்து கிடைக்​கும் பனை விதைகளை மணற்​பாங்​கான பகு​தி​களில் விதைத்​தால் பனங்கிழங்கு கிடைக்​கிறது. ஒவ்​வொரு ஆண்​டும் பொங்​கல் பண்​டிகை வழி​பாட்​டில், தானி​யங்​கள், நெல் மணி​கள், காய்​கறிகளு​டன், பனங்​கிழங்​களும் பிர​தான​மாக இடம்​பெறும்.

தூத்​துக்​குடி மாவட்​டத்​தின் வடபகு​தி​யான எட்​டயபுரம் அருகே தாப்​பாத்​தி, அயன் ​வடமலாபுரம் மற்​றும் வைப்​பாற்று கரையோரப் பகு​தி​யில் சுமார் 2 லட்​சம் பனை மரங்​கள் உள்​ளன. இதனை நம்பி சுமார் ஆயிரம் தொழிலா​ளர்​கள் உள்​ளனர். இங்கு ஆண்​டுதோறும் பிப்​ர​வரி கடைசி முதல் ஜூலை வரை​யிலும் பதநீர் உற்​பத்தி கால​மாகும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in