வேலையிழப்பை வெற்றிக்கான வழியாக மாற்றியமைத்த பூபதி | ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரின் விவசாயப் புரட்சி

பூபதிராஜ்

பூபதிராஜ்

Updated on
2 min read

வாழ்க்கை ஒரு கதவை அடைக்கும்போது, மற்றொரு கதவைத் திறக்கும் என்பார்கள். பலருக்குக் கோவிட் பெருந்தொற்று காலம் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியது. ஆனால், ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரிக்கு அது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக அமைந்தது.

இயந்திரக் கனவுகளும் விவசாய வேர்களும்

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள கொடிங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதிராஜ் (34). எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், இயந்திரங்களின் மீது கொண்ட ஈர்ப்பால் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பயின்றார்.

சென்னை, கோவை எனத் தனியார் நிறுவனங்களில் கைநிறையச் சம்பளத்துடன் பணியாற்றி வந்தவருக்கு, 2020இல் ஏற்பட்ட கோவிட் ஊரடங்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. நிறுவனம் ஆட்குறைப்பு செய்தபோது வேலையை இழந்த பூபதிராஜ், தனது சொந்த ஊருக்குத் திரும்பினார்.

சவாலைச் சாதகமாக்கிய பொறியியல் மூளை

வேலையிழந்த தொடக்கத்தில் மனச்சோர்வு ஏற்பட்டாலும், தனது குடும்பத்தின் பூர்வீகத் தொழிலான விவசாயத்தை ஏன் நவீனப்படுத்தக்கூடாது என்ற சிந்தனை அவருக்கு உதித்தது. வழக்கமான தென்னை சாகுபடியுடன் நின்றுவிடாமல், தனது பொறியியல் அறிவை விவசாயத்தில் புகுத்தினார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in