நித்திய கல்யாணியில் நிறைய லாபம்

நித்திய கல்யாணியில் நிறைய லாபம்
Updated on
2 min read

விருதுநகர் அருகே வானம் பார்த்த வறண்ட பூமியை வண்​ணமய​மாக்​கும் வகை​யில் நித்​திய கல்யாணி சாகுபடி செய்து நல்ல விளைச்​சலும் லாப​மும் பார்த்து வரு​கிறார் விவ​சாயி முரு​கேசன் (51).

விருதுநகர் அருகே உள்ள பெரியபே​ராலியைச் சேர்ந்​தவர் முரு​கேசன். தாத்தா காலத்​திலிருந்து விசா​யத் தொழில் மேற்​கொண்​டு​வரும் இவர், மழை இல்​லாமல் வறண்ட தனது விவ​சாய நிலத்​தில், மருத்​துவ பயிர்​களான நித்​தி​யகல்​யாணி, நீல அவுரி, பூனைக்​காளி, கடு​கடு​காணம், மல்லி போன்​றவை​களை இயற்கை முறை​யில் சாகுபடி செய்து சாதனை படைத்து வரு​கிறார்.

இதுகுறித்து விவ​சாயி முரு​கேசன் கூறுகை​யில், “எங்​கள் பகுதி பாசன வசதி இல்​லாத, வானம் பார்த்த பூமி. இங்கு பெரும்பாலும் மக்​காச்​சோளம், கம்​பு, சூரிய​காந்தி போன்ற பயிர்​களே அதிகம் பயி​ரிடப்​படு​வது வழக்​கம். கடந்த சில ஆண்​டு​களாக காட்​டுப் பன்​றிகளால் பயிர்​கள் அதிக அளவில் சேதமடைந்து வருகின்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in