ஜவ்வாதுமலையில் லிச்சி பழ விளைச்சல்: புதிய அத்தியாயம் படைத்த மலைக்கிராம விவசாயிகள்

ஜவ்வாதுமலையில் லிச்சி பழ விளைச்சல்: புதிய அத்தியாயம் படைத்த மலைக்கிராம விவசாயிகள்
Updated on
2 min read

திருவண்ணாமலை மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் ஜவ்வாதுமலைப் பகுதியில், வழக்கமான பயிர் முறைகளைத் தாண்டி, புதியதொரு வேளாண் புரட்சி அரங்கேறியுள்ளது.

வட மாநிலங்களின் குளிர்ந்த தட்பவெப்பநிலையில் மட்டுமே விளையக் கூடிய லிச்சி பழங்களை, தங்களின் அயராது உழைப்பால் அறுவடை செய்து சாதனை படைத்துள்ளனர் இப்பகுதி மலைக்கிராம விவசாயிகள். குக்கிராம விவசாயிகளால் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த சாதனை, தமிழக விவசாய மேம்பாட்டில் ஒரு முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.

சீனத்து வருகை

ஈரப்​ப​த​மும் மிதமான குளிர்ச்சி​யும் கொண்ட மிதவெப்ப மண்டலக் காலநிலையை வாழ்​வா​தா​ர​மாகக் கொண்டது லிச்சி பழச்​செடி​யாகும். சீனா​வைத் தாயக​மாகக் கொண்ட இந்த சுவையான பழம், இந்தியா​வில் பீகார் மாநிலத்​தில் மிக அதிக அளவில் உற்பத்தி செய்​யப்​படு​கிறது.

அதனைத் தொடர்ந்து உத்தரப்​பிரதேசம், மேற்​கு​வங்​கம், பஞ்சாப் மற்றும் அஸ்ஸாம் போன்ற வட இந்திய மாநிலங்​களில் மட்டுமே இந்த சாகுபடி இருந்து வந்தது. தமிழகத்தைப் பொறுத்​தமட்​டில், கொடைக்​கானலில் மட்டுமே இதுவரை சோதனை முறை​யில் பயிரிடப்​பட்டு, ஓரளவு மகசூல் பெறப்​பட்​டிருந்​தது.

ஆட்சி​யரின் தொலைநோக்​குப் பார்வை

லிச்சி பழ பயிர்ச் சாகுபடிக்கு ஏற்ற இயல்பான காலநிலை ஜவ்வாது​மலை​யில் இல்லை என்ற போதி​லும், இங்குள்ள தட்பவெப்ப மாற்​றங்​களைப் பயன்​படுத்தி புதி​யதொரு முயற்​சியை மேற்​கொள்ள திட்​ட​மிட்​டார் அன்றைய மாவட்ட ஆட்சியர் கந்த​சாமி.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in