நீலகிரியில் இயற்கை சாகுபடியாளர்களை உருவாக்கும் தோட்டக்கலைத் துறை

இயற்கை விவசாயத் தோட்டத்தில் பார்த்​த​சா​ரதி (நடுவில் இருப்பவர்). உடன் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஜெயலட்சுமி, ‘அட்மா' திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரன்.

இயற்கை விவசாயத் தோட்டத்தில் பார்த்​த​சா​ரதி (நடுவில் இருப்பவர்). உடன் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஜெயலட்சுமி, ‘அட்மா' திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரன்.

Updated on
2 min read

நீலகிரி மாவட்டத்தை 5 ஆண்​டு​களுக்​குள் முழு​மை​யான இயற்கை வேளாண்மை மாவட்​ட​மாக மாற்​றும் திட்​டத்தை தமிழக அரசு அறி​வித்​தது. இதற்​காக ரூ.50 கோடி நிதி​யும் ஒதுக்​கப்​பட்​டது. நீலகிரி மாவட்​டத்​தில் ரசாயன உரங்​கள் மற்​றும் பூச்​சிக்​கொல்​லிகளின் பயன்​பாட்​டைக் குறைத்​தல் இந்​தத் திட்​டத்​தின் நோக்​க​மாகும்.

இந்த இலக்கை அடைய, மண்​புழு உரம், பஞ்​சகவ்யா போன்ற இயற்கை இடு​பொருட்​கள் தயாரிப்​புக்கு விவ​சா​யிகளுக்கு உதவுதல்; விவ​சா​யிகளுக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி அளித்து ‘அங்​ககச் சான்​றிதழ்’ வழங்​குதல் போன்ற நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

இதற்​காக ஆர்​வ​முள்ள விவ​சா​யிகள், படிப்பு முடிந்து வேலை தேடும் இளைஞர்​கள் தேர்வு செய்​யப்​பட்​டு, அவர்​களுக்கு தோட்​டக்​கலை மற்​றும் மலைப்​ப​யிர்​கள் துறை​யின் கீழ் இயங்​கும் ஊட்டி உழவர் பயிற்சி நிலை​யம் மூலம் இயற்கை வேளாண்மை தொடர்​பான தொழில்​நுட்பப் பயிற்சி வழங்​கப்​பட்டு வரு​கிறது. இயற்கை சாகுபடி​யாளர் என்ற இந்த பயிற்சி இது​வரை இரண்டு கட்​டங்​கள் நிறைவு​பெற்​றுள்​ளன. மூன்​றாம் கட்​டப் பயிற்சி தற்​போது நடை​பெற்று வரு​கிறது.

இது​வரை 64 பேர் இயற்கை சாகுபடி​யாளர் பயிற்​சியை முடித்​துள்​ளனர். இவர்​கள், தங்​களுக்கு பயிற்​சி​யில் வழங்​கப்​பட்ட தொழில்​நுட்ப அறிவைப் பயன்​படுத்​தி, தங்​களது சொந்த நிலங்​களில் இயற்கை வேளாண்​மையை மேற்​கொண்​டுள்​ளனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in