

விவசாயம் என்பது வெறும் உணவு உற்பத்தியோடு முடிந்துவிடும் ஒரு செயலல்ல; அது ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது.
விவசாயிகள் தங்களிடம் உள்ள நிலம், உழைப்பு மற்றும் மூலதனம் போன்ற வளங்களை எவ்வாறு மிகச்சிறந்த முறையில் பயன்படுத்தி, அதிக லாபம் ஈட்ட முடியும் என்பதைப் பற்றி அவசியம் அறிந்திருக்க வேண்டும். விவசாயப் பொருளாதார நுணுக்கங்களில் அதிக கவனம் செலுத்தும் விவசாயிகளே இன்றைய சூழலில் வெற்றி பெறுகிறார்கள்.
குறிப்பாக, சாகுபடி செலவு மேலாண்மையில் சிறந்து விளங்குவோருக்கு வெற்றி நிச்சயம் என்பதே பல முன்னோடி விவசாயிகளின் அனுபவப் பாடமாக உள்ளது.
உற்பத்தித் திறனைத் தீர்மானிக்கும் காரணிகள் விவசாய உற்பத்தியைத் தீர்மானிப்பதில் நிலம், நீர், காலநிலை, மனித உழைப்பு, மூலதனம் மற்றும் நிர்வாகம் ஆகிய காரணிகளே மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இவை இன்றி விவசாயம் சாத்தியமில்லை. இதில் மனித உழைப்பு என்பது திட்டமிடல் முதல் அறுவடை வரை செய்யப்படும் அனைத்து உடல் ரீதியான பணிகளையும் உள்ளடக்கியது. அதேபோல, மூலதனம் என்பது இடுபொருட்கள், சாகுபடி இயந்திரங்கள் மற்றும் பணிகளுக்காகச் செய்யப்படும் செலவுகளைக் குறிக்கிறது.