கால்நடை உற்பத்தியை பெருக்க மரபுவழி மருத்துவமே உகந்தது

பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான கால்நடை ஆராய்ச்சியாளர் ந.புண்ணியமூர்த்தியுடன் நேர்காணல்
டாக்டர் ந.புண்​ணி​யமூர்த்​தி​.

டாக்டர் ந.புண்​ணி​யமூர்த்​தி​.

Updated on
2 min read

மனித குலத்​துக்கு விவ​சா​யம் மூலம் கிடைக்​கும் உணவுப் பொருட்​களே மிக முக்​கிய​மான ஆதா​ர​மாக திகழ்​கின்​றன. இந்த விவ​சா​யத்​துக்கு மிக​வும் உறு​துணை​யாக இருப்​பவை கால்நடைகள். விவ​சாயமே பிர​தான​மாக இருக்​கும் இந்​தியா போன்ற நாடு​களில் கால்நடை வளர்ப்​பும் முக்​கி​யத் தொழிலாக இருந்து வரு​கிறது.

இந்​தி​யா​வில் ஆரம்ப காலம் தொட்டே கால்நடை வளர்ப்​பில் விவ​சா​யிகள் ஆர்​வம் காட்டி வரு​கின்​றனர். இந்த கால்நடைகளும் மனித இனம் போன்றே பல்​வேறு நோய் தாக்​குதல்​களுக்கு ஆளாகி வரு​கின்​றன. அபாயகர​மான நோய் தாக்​குதல்​களால் கால்நடைகள் உயி​ரிழக்​கும் தருணங்​களில், அந்த இழப்பை தாங்க முடி​யாமல் விவ​சா​யிகள் பரிதவிக்​கின்​றனர்.

இந்த சூழலில்​தான், மரபு வழி மருத்​து​வம் மூலம் கால்நடைகளைத் தாக்​கும் நோய்​களுக்கு தீர்வு காணும் ஆராய்ச்​சி​யில் இறங்​கி​னார் தஞ்​சாவூரைச் சேர்ந்த கால்நடை ஆராய்ச்​சி​யாளர் டாக்​டர் ந.புண்​ணி​யமூர்த்தி (68). இவரது ஆராய்ச்​சி​யின் மூலம் கண்​டறியப்​பட்ட கால்நடைகளுக்கான மரபு வழி மருத்​து​வம், இன்று உலகின் பல நாடு​களில் நடை​முறைப்​படுத்​தப்​பட்டு வரு​கிறது.

இந்த மகத்​தான பணிக்​காக இந்​திய நாட்​டின் உயரிய விருதுகளில் ஒன்​றான பத்மஸ்ரீ விருதுக்கு அண்​மை​யில் தேர்வு செய்​யப்​பட்​டுள்ள நிலை​யில், தனது ஆராய்ச்சி அனுபவங்​களை ‘நில​மும் வளமும்' வாசகர்​களுக்​காக அவர் பகிர்ந்து கொண்​டார்.

கால்நடை மருத்​துவ அறி​வியல் படிப்​பில் முதுகலை பட்டம் பெற்ற நான், ‘நோயும், மருந்​தி​யலும்' என்ற தலைப்​பில் ஆய்வு செய்து முனை​வர் பட்​டமும் பெற்​றேன். படித்து முடித்​ததும் தமிழ்​நாடு கால்நடை மருத்​துவ அறி​வியல் பல்​கலைக்​கழகத்​தில் பேராசிரிய​ராக பணி​யாற்​றினேன்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in