எல் நினோ அச்சுறுத்தல்: தகிக்கும் வானிலையும் தடம் மாறும் விவசாயமும்

எல் நினோ அச்சுறுத்தல்: தகிக்கும் வானிலையும் தடம் மாறும் விவசாயமும்
Updated on
2 min read

உலகளாவிய வானிலை மாற்றங்களில் மிக முக்கியப் பங்காற்றும் எல் நினோ நிகழ்வு, தற்போதைய சூழலில் சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் பெரும் கவலைகளை ஏற்படுத்தி வருகிறது. பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிலவும் கடல் மேற்பரப்பு நீரின் வழக்கத்திற்கு மாறான வெப்பமயமாதலே எல் நினோ என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிகழ்வு உலகெங்கிலும் உள்ள காற்று வீசும் திசையையும், மழைப்பொழிவு வடிவங்களையும் தலைகீழாக மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டது. குறிப்பாக, பருவமழையை மட்டுமே பிரதானமாக நம்பி வாழும் இந்தியத் துணைக்கண்டத்தின் விவசாயத் துறைக்கு எல் நினோ எப்போதுமே ஒரு சவாலான காலகட்டமாகவே பார்க்கப்படுகிறது.

இந்திய விவசா​யத்தின் முதுகெலும்பாக விளங்குவது தென்மேற்கு பருவமழைக்​கால​மாகும். எல் நினோ தீவிரமடையும் ஆண்டு​களில், இந்த வழக்கமான பருவமழைப்​பொழிவு பெருமளவில் பொய்த்துப் போகிறது அல்லது கால தாமதமாகத் தொடங்கு​கிறது. மழைப்​பொழிவில் ஏற்படும் இந்த மாற்றம், நாட்டின் ஒட்டுமொத்த நீர் ஆதாரங்​களையும் வற்றச் செய்கிறது.

ஆறுகள், குளங்கள் மற்றும் ஏரிகள் போன்ற நீர்நிலைகளில் நீர் இருப்பு குறைவது ஒருபுறமிருக்க, நிலத்தடி நீர்மட்​டமும் மிக வேகமாகக் கீழ்நோக்கிச் செல்கிறது. இத்தகைய சூழல் பாசன வசதி கொண்ட நிலங்​களை​யும், வானம் பார்த்த பூமிகளையும் ஒரே நேரத்தில் வறட்சியின் பிடிக்குள் தள்ளுகிறது.

சாகுபடி வீழ்ச்சி

மழை தள்ளிப்​போகும்போது ஒட்டுமொத்த சாகுபடி சுழற்​சியும் நிலைதடு​மாறுகிறது. வழக்கமாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்​களில் விறுவிறுப்பாக நடைபெற வேண்டிய விதைப்பு மற்றும் நாற்று நடும் பணிகள், போதிய நீர் இல்லாததால் தள்ளிப்​போகின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in