இயற்கை வேளாண்மையில் வெற்றி பெற பலவகை சாகுபடி அவசியம்

ரமேஷ் சுப்​பிரமணியன்

ரமேஷ் சுப்​பிரமணியன்

Updated on
1 min read

காஞ்​சிபுரம் வேலா​யுதம் நகரில் வசிப்​பவர் ரமேஷ் சுப்​பிரமணி​யன் (58). இவர் காவாந்​தண்​டலம் கிராமத்​தைச் சேர்ந்​தவர். இவரது மனைவி நித்​யா. மகன் குருதேவ் கனடா​வில் மென்​பொருள் பொறி​யாள​ராகப் பணிபுரிகிறார்.

டிப்​ளமோ முடித்​து​விட்டு பல ஆண்​டு​களாகக் கட்​டிடப் பொறி​யாள​ராகப் துபாய் உள்​ளிட்ட வெளி​நாடு​களி​லும், இந்​தி​யா​வின் பல்​வேறு மாநிலங்​களி​லும் பணி​யாற்​றிய ரமேஷ், சுமார் ஐந்து ஆண்​டு​களுக்கு முன்பு அந்​தப் பணியை விட்டு வில​கி, இயற்கை விவ​சா​யம் செய்​யத் தொடங்​கி​னார்.

தனது தோட்​டத்​தில், 5 ஏக்​கரில் வேர்க்​கடலை, எள், உளுந்​து, நெல், கத்​தரிக்​காய், தக்​காளி, பீர்க்​கங்​காய் உள்​ளிட்ட பல்​வேறு காய்​கறிகள் மற்​றும் பயறு வகைகளைப் பயி​ரிட்டு வரு​கிறார். தூயமல்​லி, குள்​ளக்​கார் போன்ற பாரம்​பரிய நெல் வகைகளை​யும் அவர் சாகுபடி செய்கிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in