

பாபநாசம் வட்டம் ஆதனூரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி. (உள்படம்) விவசாயி தேசிங்குராஜன்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கோட்டத்துக்குட்பட்ட கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய மூன்று வட்டங்களில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
விவசாயிகள் விளைவிக்கும் பருத்தி, இவ்வட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் அன்றைய சந்தை நிலவரப்படி விலை நிர்ணயம் செய்யப்பட்டு, அதற்கான தொகை நேரடியாக அவர்களின் வங்கிச் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.
சாகுபடி பரப்பளவு குறைவு
கடந்த நான்கு ஆண்டுகளாகப் பருத்திக்கு போதிய விலை கிடைக்காததால், அதன் சாகுபடிப் பரப்பு படிப்படியாகக் குறைந்து வந்தது. கடந்த ஆண்டு 4,400 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட பருத்தி சாகுபடி, நிகழாண்டில் 3,000 ஏக்கராகச் சுருங்கியுள்ளது.