பாரெங்கும் பயிர்த்தொழில் - 1

பாரெங்கும் பயிர்த்தொழில் - 1
Updated on
2 min read

பன்​னிரண்டு ஆயிரம் வருடங்​களுக்கு முன்பு இந்த உலகில் மலர்ந்த புதுக்கற்​காலப் புரட்​சி​யின் வசந்த காலத்​தில் தோன்​றியது​தான் பயிர்த்தொழில். பயிர்த்தொழிலை கைக்கொண்ட மனிதன் மெல்ல மெல்ல வேட்டையாடுதலை நிறுத்திக்கொண்ட அதே வேளையில், நாகரிகம் கண்டான். அதனால் வளம் கண்ட மனிதன், பயிர்த்தொழிலின் அனைத்து பரிணாமத்தையும் உணர ஆரம்பித்தான்.

அத்தகைய உணர்வின் தொடக்கத்தில் முதன் முதலில் மத்திய கிழக்கு நாடுகளில் பயிர்த்தொழில் தோன்றியது. அது, இன்று பாரெங்கும் கோலோச்சி வருகிறது. இப்​படி பண்​பட்ட பயிர்த்​தொழிலை தன்​வசப்​படுத்​திய மனிதனின் காலோட்​டம் என்​பது ஒரு நாளில் நிகழ்ந்​தது அல்ல. அது மனிதனின் எண்​ணவோட்​ட​மாக எவ்​வாறு மாறியது என்​பதை ஒவ்​வொரு ஆராய்ச்​சி​யாளர்​களும் அவர்​களின் ஆராய்ச்​சிக்கு உட்​படுத்தி ஆராய்ந்து உள்​ளனர்.

அதில் சமீபத்​திய ஆய்​வொன்றை வெளி​யிட்ட ஜெரு சலத்​தின் ஹெப்​றேவ் பல்​கலைக்​கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் அமோஸ் ப்ரும்​கின், “வேட்​டை​யாடு​தலை விட்​டு​விட்டு வேளாண்மை புரிய மனிதன் வந்​ததற்கு முழு​முதற் காரணம் அப்​போது நடந்த காலநிலை மாற்​றமே” என்று கண்​டறிந்​துள்​ளார்.

மேலும் அவர் இந்த ஆய்வை உறு​திபடுத்​து​வதற்​காக ஏரி​களில் இருக்​கும் கரிமண், குகை​களில் உரு​வான கார்​பன் படிமங்​கள், கடல் மட்​டம் மற்​றும் மண் தேக்க படிவங்​கள் போன்​றவற்றைச் சேகரித்து உறு​திபடுத்​தி​ உள்​ளார். “மனிதர்​களின் ஆரம்ப கற்​கால கால​கட்​டத்​தில் மின்​னல் அதி​கரிப்​பால் ஏற்​பட்ட காட்​டுத்​தீ​யால் காடு​களில் இருக்​கும் தாவர வளங்​கள் பாதிப்​பிற்கு உள்​ளாகின.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in