Last Updated : 08 Jul, 2014 07:15 PM

 

Published : 08 Jul 2014 07:15 PM
Last Updated : 08 Jul 2014 07:15 PM

வீரபத்ராசனம் (வீரர்களைப் போன்ற நிலை)

வீரபத்ராசனம் 1

வீரபத்ராசனத்தில் மூன்று விதமான நிலைகள் உள்ளன. அவற்றில் முதல் நிலையைப் பார்ப்போம்.

முதல் நிலை:

# தாடாசனத்தில் நில்லுங்கள். மூச்சை உள்ளிழுத்தபடி கால்களை விரிக்க வேண்டும். சற்றே குதித்தும் கால்களை விரிக்கலாம். மூன்றரை முதல் நான்கு அடி தூரம் வரை விரிக்கலாம்.

# இடது கால் பாதத்தை 45 முதல் 60 டிகிரிவரை வலது புறம் திருப்புங்கள். வலது கால் பாதத்தை 90 டிகிரிவரை வலது புறம் திருப்புங்கள்.

# வலது குதிகாலும் இடது குதிகாலும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.

# இப்போது உடலை வலது புறம் திருப்ப வேண்டும்.

# கைகளை மேலே கொண்டுசென்று இரு உள்ளங்கைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

# வலது காலை மடக்குங்கள். வலது தொடை தரைக்கு இணையாக இருக்க வேண்டும். இடது கால் எந்த நெளிவும் இல்லாமல் நேராக இருக்க வேண்டும். முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். மெல்ல மெல்லப் பழக்கினால் சரியாகிவிடும்.

# உடல் சற்றே பின்னால் வளைய வேண்டும். தலை சற்றுப் பின்புறம் சாய வேண்டும்.

# இந்த நிலையில் 10 முதல் 30 விநாடிகள்வரை இருக்கலாம். உடலில் வலி ஏற்பட்டால் ஒரு சில விநாடிகள் மட்டும் நின்றுவிட்டுப் பழைய நிலைக்கு வரலாம். சிறிது சிறிதாக நேரத்தைக் கூட்டலாம்.

# இதே போல் இடது பக்கம் செய்யவும். இந்த ஆசனத்தை 3 முதல் 5 முறை செய்யலாம்.

பலன்கள்:

# இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு குறையும்.

# மார்பு விரிவடைந்து சுவாசம் எளிதாகும்.

# கால்கள் வலுப்பெறும்.

# கழுத்து இறுக்கம் தளரும்.

# தோள்பட்டைகள் வலுப்பெறும்.

# கவனக் குவிப்பு, உடல் ஸ்திரத்தன்மை ஆகியவை கூடும்.

# மொத்த உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

எச்சரிக்கை:

# இடுப்பு, கழுத்து, முழங்கால், பாதம் ஆகிய பகுதிகளில் வலி இருக்கும்போது இதைச் செய்வதைத் தவிர்க்கவும்.

# கழுத்தும் உடலும் விறைப்பாக இல்லாமல் இலகுவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x