Last Updated : 29 Nov, 2022 06:34 AM

 

Published : 29 Nov 2022 06:34 AM
Last Updated : 29 Nov 2022 06:34 AM

சேதி தெரியுமா?

நவ.17: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையாளிகள் நளினி உள்பட ஆறு பேர் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது.

நவ.18: நாடு முழுவதும் ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நவ.9: விருப்ப ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அருண் கோயலைத் தேர்தல் ஆணையராக நியமனம் செய்து அறிவிப்பு வெளியானது.

நவ.20: ஆசிய நாடான கத்தாரில் 22வது உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் தொடங்கின. இத்தொடரில் 32 அணிகள் பங்கேற்றுள்ளன.

நவ.22: இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முறையாகக் கடல் காற்றாலை ஆய்வு மையத்தை ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடற்கரையில் அமைக்க மத்தியக் காற்றாலை நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நவ.23: ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இப்பட்டத்தை வெல்லும் மிக வயதான வீரர் (35) இவர்.

நவ.24: தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள 193.215 ஹெக்டேர் பரப்பிலான பகுதியைப் பல்லுயிர் பாரம்பரியத் தலமாகத் தமிழக அரசு அறிவித்தது.

நவ.26: மங்களூரு குக்கர் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாகத் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

நவ.26: புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ‘ஓஷன்சாட்-03’ மற்றும் எட்டு நானோ செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி54 ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

நவ.27: தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை டிசம்பர் 31ஆம் தேதி வரை இணைக்கலாம் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். - தொகுப்பு: மிது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x