Published : 20 Nov 2022 08:26 AM
Last Updated : 20 Nov 2022 08:26 AM
அந்தக் காலத்தில் வயலுகளுக் கெல்லாம் இயற்கை உரம்தான் போடுவார்கள். அதனால் முள் செடியை மட்டும் விட்டுவிட்டு மற்ற செடிகளையெல்லாம் பிடுங்கி தொளி உழவில் போட்டு மிதித்துவிடுவார்கள். தண்ணீர் உழவாக நாலைந்து உழவு ஆழ அடித்ததற்கும் நெகிழ்ந்துபோய் கிடக்கும் வண்டல் மண்ணிற்கும் இந்தக் குலைகளைப் போட்டு மிதித்தால் இந்தக் குலைகளெல்லாம் தண்ணீருக்குள் அமுங்கிப்போய்விடும். வயலின் மேற்பரப்பில் வெறும் தெளிந்த தண்ணீர்தான் தென்படும். நாற்றை நடுவதற்கும் லேசாக இருக்கும்.
அப்போது ஒருநாள் முழுக்க வேலை செய்தால் எட்டணாதான் (ஐம்பது பைசா) கூலி. ஆனால், இந்தக் கொளைக்கட்டு போடும் காலத்தில் ஒரு கட்டுக்கு ஆறணா என்று கொடுப்பார்கள். அதனால் ஒவ்வொரு பெண்ணும் நடுச்சாமத்துக்கே எழுந்து சாணியைக் கரைத்து வாசலை மட்டும் தெளித்துவிட்டு ஓடுவார்கள். அதுவும்கூட சாணியைக் கரைத்து வாசலைத் தெளிக்காவிட்டால் ‘கிருமிகள்’ பரவிவிடுமாம். அதனால் வாசலைத் தெளித்துவிட்டு இடுப்பில் அரிவாளை சொருகிக்கொண்டு ஓடுவார்கள். பிடுங்க முடியாத செடிகளை அறுப்பதற்காகத்தான் அந்த அரிவாள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT